டெல்லியின் மெஹ்ருலி பகுதியில் நேற்று (மே 30) இரவு 8 மணியளவில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். மீட்புக்குழுவினர் நடத்திய தேடுதலில் இதுவரை 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.