அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் மேகதாது அணை பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி குறுக்கே அணை கட்டுவது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறி கர்நாடகா செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், முதலமைச்சர் விஜயும் தங்கள் பதவியைக் காக்க மாநில உரிமைகளை அடகு வைத்துவிடுவார்களோ? என விவசாயிகள் அச்சப்படுவதாக தெரிவித்துள்ளார்.