மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு
திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பலவீனமான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதாக நினைத்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆணவமாக பேசுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், காவிரி விவகாரத்தில் தமிழக முதல்வர்
விஜய் இப்போதாவது மௌனம் கலைத்து, கர்நாடக அரசின் இந்த முயற்சியை ஆரம்பத்திலேயே முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.