மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மைசூரில் இன்று (நவ., 11) செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
'நடப்பாண்டு அதிக மழைப்பொழிவு காரணமாக தமிழ்நாட்டிற்கு வழக்கத்தை விட கூடுதலாக 150 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேகதாது அணைத் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என்றும் கூறியுள்ளார்.