கர்நாடக அரசின் மாதவிடாய் விடுப்புக் கொள்கையை அமல்படுத்த அனுமதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மாதவிடாய் விடுமுறை என்பது அடிப்படை உரிமை என கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. “மாதவிடாய் விடுமுறை பெறுவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள வாழ்வுரிமையின் ஒரு பகுதி. ஆணும் பெண்ணும் சட்டத்தின் முன் சமம் என்றாலும், அவர்கள் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள். அதை அங்கீகரிப்பதே சமத்துவத்திற்கு ஒரு முழுமையான அர்த்தத்தைத் தரும்” என நீதிமன்றம் கூறியுள்ளது.