கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்யவுள்ளார். வரும் நவ.25ஆம் தேதி கோவையில் செம்மொழி பூங்காவை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, அம்மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். தொடர்ந்து. நவ.26ஆம் தேதி ஈரோட்டில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.