திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்று அம்மாவட்ட திமுகவினர் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக திருச்சி தெற்கு மாவட்ட திமுகவை தொடர்ந்து, தற்போது திருச்சி மாநகர செயற்குழு கூட்டத்திலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளின் இந்த ஒட்டுமொத்த கோரிக்கையை ஏற்று
ஸ்டாலின் இந்த இடைத்தேர்தல் களத்தில் இறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.