சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகனுடன், திமுக கூட்டணி கட்சியான தவாகவின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காவிரி உபரிநீர் அந்தியூர் - பவானி தொகுதிக்கு செல்ல என்ன நடவடிக்கை என வேல்முருகன் கேள்வியெழுப்பிய நிலையில், பிற தொகுதி கோரிக்கையை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் கேட்பார்கள் என அமைச்சர் துரைமுருகன் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.