"மோடி ஆபரேஷன் சிந்தூரிலிருந்து அரசியல் ஆதாயம் பெற விரும்புகிறார்"

3779பார்த்தது
"மோடி ஆபரேஷன் சிந்தூரிலிருந்து அரசியல் ஆதாயம் பெற விரும்புகிறார்"
பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூரிலிருந்து அரசியல் ஆதாயம் பெற விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "மோடி மே 25-ம் தேதி NDA கூட்டணி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளது அரசியல் ஆதாயம் பெறுவதற்கே. இப்போது பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக அனைத்து கட்சிகளின் எம்பிக்களும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.