பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மத்திய அரசு ‘பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரை முதலீடு செய்வதன் மூலம், அவர்களுக்கு 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.3,000 நிரந்தர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஒருவேளை பயனாளி மரணமடைந்தால், அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.1,500 வழங்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.