விருதுநகரில் 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் நேற்று (பிப்., 12) அதிமுகவில் இணைந்தனர். அவர்கள் அனைவருக்கும் கட்சி துண்டு அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் திமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.