“தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்பதே லட்சியம்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரில் இன்று (நவ.7) பேசிய அவர், “ஒரு அரசாங்கம் தன்னுடைய மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என நினைத்தால், மத்திய மற்றும் மாநிலத்தில் ஒரே அரசு ஆட்சியில் இருக்க வேண்டும். அல்லது கூட்டணியிலாவது இருக்க வேண்டும். அதனைத் தான் எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார்” என்றார்.