மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேச அரசு பள்ளி ஒன்றில் செய்தித்தாளில் குழந்தைகள் உணவருந்தும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். “இந்த பரிதாபகரமான நிலையில் குழந்தைகள் மதிய உணவு உண்ணும் காட்சி என் இதயத்தை நொறுக்கியது. 20 ஆண்டுகளாக ஆளும் பாஜக அரசு குழந்தைகளுக்கான தட்டுகளையும் திருடியுள்ளது” என்று அவர் விமர்சித்துள்ளார்.