மியான்மர் அதிபர் யு மின், பீகாரின் கயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில் தரிசனம் செய்துவிட்டு டெல்லி வந்துள்ளார். அவருடன் உயர்மட்டக்குழுவும் வந்துள்ளது. நாளை (திங்கட்கிழமை)
பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துகிறார். வர்த்தக நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். பின்னர், 2-ந்தேதி மும்பை சென்று தொழில்துறை தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.