சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்ட புனிதன் என்ற விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 நாட்களுக்கு முன் தாம்பரம் சங்கர்நகர் போலீசார், புனிதனை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட புனிதன் உடல்நலக்குறைவால் நேற்று (பிப்.19) ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.