நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் சீசன் துவங்கியுள்ள நிலையில், இலட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர் பறவைகள், நிலப்பரவைகள் வந்துள்ளன. மேகமூட்டத்துடன் கூடிய குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், சரணாலயத்தின் உள்ளே ஏராளமான பறவைகள் காணப்படுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.