நாகை மீனவர்கள் 31 பேர் 3 விசை படகுகளுடன் கைது

1பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்களை, இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் நம்பியார் நகர் மற்றும் அக்கரைப்பேட்டை மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், கடந்த 30 ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். கோடியக்கரை தென் கிழக்கே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, யாழ்ப்பாணம் கடல் பரப்பில் எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் நாகை மாவட்ட மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி