நாகப்பட்டினம் அருகே உத்தமசோழபுரம் கிராமத்தில் சாலையோரம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 80 வயது மூதாட்டியை, குடிபோதையில் வந்த ஒருவர் கன்னத்தில் கடித்து பாலியல் சீண்டல் செய்துள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து நாகூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.