நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களில் கூடுதலாக பத்து ரூபாய் பெறப்படும் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபானங்களை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். கூடுதலாக பெற்றுக்கொண்ட தொகையை வாடிக்கையாளர்கள் காலி புட்டிகளை திரும்ப ஒப்படைக்கும் போது காலி பாட்டில் ஒன்றுக்கு ரூ. 10/- வீதம் திரும்ப வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.