உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 469வது ஆண்டு கந்தூரி விழா இன்று தொடங்குகிறது. விழாவின் கொடியேற்றத்திற்கு முன்பாக, நாகை பட்டினச்சேரி மீனவர்கள் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை கொண்டு வந்துள்ளனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, இறைவனிடம் கையேந்துங்கள் என்ற வாசகத்துடன் நாதஸ்வர இசையுடன் சீர்வரிசை எடுத்து வந்த மீனவ கிராம பஞ்சாயத்தாரை தர்கா நிர்வாகத்தினர் வரவேற்றனர். இந்த சீர்வரிசை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.