திருவாரூர், நாகப்பட்டினத்தில் நாளை (நவம்பர் 5) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 5) ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.