நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சியில் பூதங்குடியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கீழ்வேளூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெருங்கடம்பனூர் பகுதியில் ஆண்களும் பெண்களும் நூற்றுக்கணக்கானவர்கள் ஒன்றுகூடி ஒப்பாரி வைத்து கும்மி அடித்து தங்களது எதிர்ப்பை தமிழக அரசுக்கும், தொடர்ச்சியாக விவசாயிகளை அலட்சியப்படுத்தும் நாகை மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.