நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்த பயணிகள் கப்பல், பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த நவம்பர் 2025 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பயணிகள் கப்பல் வரும் 6-ஆம் தேதியிலிருந்து மீண்டும் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும். பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு அளவு ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை.