திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் 10 ஆம் வகுப்பு மாணவனை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக அங்கன்வாடி ஊழியர் லலிதா (35) மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மாவட்ட மகளிர் கோர்ட்டு லலிதாவுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.18000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு அரசு சார்பில் ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.