வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய அதிபர் இருதயராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 23ஆம் தேதி நடந்த திருப்பலியில், நம்பிக்கை மன்றாட்டு வாசித்த சிறுவன் ஒருவன் திருத்தந்தை 14ஆம் லியோ என்பதற்கு பதிலாக 14ஆம்
விஜய் என்று கூறியது அதிர்ச்சியை அளித்தது. இதுகுறித்து விசாரித்தபோது, சிறுவன் பதற்றத்தில் தவறுதலாக கூறிவிட்டதாக தெரியவந்துள்ளது. இனி இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்வதாக அவர் உறுதியளித்தார். வழிபாட்டில் இனி தவறுகள் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார்.