மயிலாடுதுறையில் ட்ரீம்ஸ் இந்தியா பவுண்டேஷன் என்ற கல்வி அறக்கட்டளை கடந்த நான்கு ஆண்டுகளாக மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி தொகை வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு பன்னிரண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 10 பேருக்கு தலா ரூ.2000 வீதம் ரூ.20 ஆயிரம் கல்வி உதவித்தொகையை வழங்கினர்.