மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரிவளூர் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பாம்புலி அம்மன், ஸ்ரீ பிடாரியம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ வீரன், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்கள் சிதிலமடைந்த நிலையில், பொதுமக்கள் சார்பில் மறுக்கட்டுமானம் செய்யப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஒன்றாம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி, நான்கு கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தன. மகா பூர்ணாகுதி, தீபாராதனைக்கு பிறகு, புனித நீர் கோபுர கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். கிராமத்தின் இஸ்லாமிய மக்களும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக அட்வகேட் ஜெனரல் திரு. ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.