நாகையில் நடந்த மீனவர்கள் மாநாட்டில் தீர்மானம்

271பார்த்தது
நாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் மஸ்தூர் யூனியன் மீனவர் பேரவை சார்பில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில், மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி வழங்கவும், தமிழ்நாடு-இலங்கை மீனவர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், இலங்கை கடற்படையின் தாக்குதல்களை நிறுத்தவும், விசைப்படகுகளை விடுவிக்கவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், கடலோர தொழிற்சாலைகளை தடுத்து நிறுத்தி, மீனவ சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி