நாகப்பட்டினம்: வாழ்மங்கலம் சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் காரைக்காலைச் சேர்ந்த மணிகண்டன் (22) மற்றும் இலுப்பூரைச் சேர்ந்த தனுஷ்கோடி (40) ஆகியோரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து பாண்டிச்சேரி மதுபாட்டில்கள் 626 (180 மிலி), ஒரு டிவிஎஸ் ஜூபிடர் இருசக்கர வாகனம் மற்றும் ஒரு விவோ கைபேசி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.