மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
தமிழக அரசு 2021ல் காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. ஆனால், புதிய திட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், ஏற்கனவே உள்ள மீத்தேன் உள்ளிட்ட எண்ணெய் எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை. இதனை கண்டித்தும், பழைய திட்டங்களை நிறுத்த வலியுறுத்தியும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.