இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு

0பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடரும் வாகன திருட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை காவல் நிலையம் அருகே, வணிக வளாகம் ஒன்றின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை, ஒருவர் பட்டப்பகலில் பூட்டை உடைத்து திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டுள்ளன. குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. திருட்டு சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி