வரும் 15 மற்றும் 16ஆம் தேதி பொங்கல் கலை விழா ஆட்சியர் தகவல்

8பார்த்தது
வரும் 15 மற்றும் 16ஆம் தேதி பொங்கல் கலை விழா ஆட்சியர் தகவல்
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் வரும் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய நாட்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை பொங்கல் கலை விழா நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் சங்கமம்- நம்ம ஊரு திருவிழாவை 14.01.2026 அன்று தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் விழாவில், தஞ்சாவூர் மண்டலக் கலை பண்பாட்டு மையம் வாயிலாக பாரம்பரிய கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பொதுமக்கள் பொங்கல் விடுமுறை நாட்களில் இந்த விழாவைக் கண்டு மகிழலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி