நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமை துவக்கிவைத்து மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஆணையை வழங்கினார். இந்த நிகழ்வில் நாகை நகர மன்ற தலைவரும் நகர கழக செயலாளருமான திரு. இரா. மாரிமுத்து கலந்து கொண்டார்.