திருவக்கரை கல்குவாரியில் வீசப்பட்ட தலையில்லாத ஆண் சடலத்தை வானூர் போலீசார் கைப்பற்றி விசாரித்தனர். திருவெண்ணைநல்லூர் அடுத்த சரவணப்பாக்கத்தை சேர்ந்த ராஜதுரை வயது(32) என்பவரை முன்விரோதம் காரணமாக ஒரு கும்பல் கொலை செய்தது தெரிய வந்தது. உடலை கல்குவாரியில் வீசியது தெரியவந்தது.
இவ்வழக்கில் 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இதில் தலைமறைவான சரவணப்பாக்கத்தை சேர்ந்த தங்கபாண்டி, வளவனூர் டி.எஸ்., நகரை சேர்ந்த சரவணன் மகன் புருஷோத்தமன் வயது25) ஆகிய 2 பேரை தேடி வந்தனர். விழுப்புரத்தில் பதுங்கியிருந்த புருஷோத்தமனை போலீசார் நேற்று கைது செய்தனர். தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.