உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்த நிதி அமைச்சர் மரிய வில்சன்,
திமுக ஆட்சியில் ரூ.1000 உரிமைத் தொகை வட மாநிலத்தவருக்கும் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும்,
திமுக ஆட்சியில் நிதி மேலாண்மை குறித்து இரண்டு வாரங்களில் வெள்ளை அறிக்கை தயாரிக்கப்படும் என்றும், மதுரை மாநகராட்சி ஊழல் குறித்த ஆதாரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கடந்த ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடிக்கு RBI கட்டுப்பாடுகள் இல்லை என்றும், ஆனால் இம்முறை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.