சாயக் கழிவுகளை வெளியேற்றிய 3 ஆலைகள் மீது அதிரடி நடவடிக்கை

0பார்த்தது
சாயக் கழிவுகளை வெளியேற்றிய 3 ஆலைகள் மீது அதிரடி நடவடிக்கை
குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் இயங்கும் சாய ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீர், சட்டவிரோதமாக இரவு நேரங்களில் கால்வாய் வழியாக காவிரி ஆற்றில் கலப்பதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடத்திய ஆய்வில், 2 நிறுவனங்கள் கழிவு நீரை ஆற்றில் கலந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி