குமாரபாளையம் பகுதியில் புதிதாகப் பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை இன்று(செப்.18) காலை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா பார்வையிட்டார். மேலும் தரமான பொருள்களைக் கொண்டு கட்டுமானங்கள் செய்ய வேண்டும் என அவர் அறுவுறுத்தினார். மேலும், அவர் வரைபடத்தை ஆய்வு செய்து அனைத்து கட்டிடங்களும் சரியானை முறையில் கட்டப்படுகிறதா எனக் கேட்டறிந்தார்.