திருச்செங்கோடு: தேர் திருவிழாவில் இளைஞர் பலி

1378பார்த்தது
திருச்செங்கோட்டில் இன்று (மே 31) காலை 10:30 மணி அளவில் அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது தேரின் சக்கரத்திற்கும் அருகில் இருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராத விதமாக சிக்கிக்கொண்ட ஹர்ஷவர்தன் (18) பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சஷ்டிகன் (19) என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய்  உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி