நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், தமிழக அரசு உடனடியாக சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்கள், சிப்காட் வருவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினர். ஆர்ப்பாட்டத்தின் போது விசில் சின்னத்தை பயன்படுத்தி விசில் ஊதி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.