நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத அளவு கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று மாலை திருச்செங்கோடு சாலையில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு முட்டை விலை ஐந்து காசு உயர்த்தி 6 ரூபாய்க்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால் சாமானிய மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.