நாமக்கல் மோகனூர் பகுதியில், உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு அறுசுவை மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பட்டினியைப் போக்கும் இந்த முயற்சி சமூக கவனத்தைப் பெற்றுள்ளது.