நாமக்கல் மதுரை வீரன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் பைக் திருட்டு போனது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நல்லிபாளையம் போலீசார் ரோந்து பணியின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த பல்சர் பைக்கை சோதனை செய்ததில், அது திருட்டு பைக் என தெரியவந்தது. இதனையடுத்து, அந்த பைக்கை ஓட்டி வந்த சாந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.