நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மோகனூர் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனையை சட்டமன்ற உறுப்பினர் திலீப் இன்று நேரில் ஆய்வு செய்தார். பொதுமக்கள் வலியுறுத்தியதற்கேற்ப, அங்கு அவசர சிகிச்சை பிரிவு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்றது. புதிய கட்டிடங்கள் கட்டுவதற்காகவும், இடம் தேர்வு செய்யவும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வு, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.