நாமக்கல் நகர காவல் நிலையத்திற்கு புதிய இன்ஸ்பெக்டராக இளவரசன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து வந்தார். ஏற்கனவே நாமக்கல்லில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் கபிலன் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், இளவரசன் இன்று முதல் புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். அவருக்கு காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.