நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் மாவட்ட சிலம்பம் ஆசான்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நல சங்கம் சார்பில் நெகிழி ஒழிப்பு மற்றும் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் விதமாக சிலம்புகளை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிலம்பாட்டம், கத்தி சுத்துதல், புலியாட்டம் போன்ற பல்வேறு சிலம்ப நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இதில் கலந்து கொண்ட வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.