"தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்"

70பார்த்தது
"தபால்துறை வாடிக்கையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம்"
நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவனலகத்தில், வரும், 30ம் தேதி காலை 11 மணிக்கு, அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள், தங்களுக்கு சேவை பெறுவதில் குறைகள் ஏதாவது இருப்பின், தங்களது புகார்களை மனுவாக எழுதி, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், நாமக்கல் கோட்டம், நாமக்கல் -637 001 என்ற முகவரிக்கு, வரும், 25க்குள் சென்றடையுமாறு அனுப்பலாம்.

புகார் அனுப்பும் அஞ்சலக உறையின் மீது அஞ்சல் துறை வாடிக்கையாளர்கள் குறை தீர்க்கும் மனு சம்பந்தமாக என, எழுதவேண்டும். குறை தீர்க்கும் கூட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு புகார்கள் தெரிவிக்க விரும்பினால், நேரடியாசுவும் கலந்து கொள்ளலாம். புகார் கடிதத்தில் முழுத் தகவல்களும் குறிப்பிட வேண்டும். அதாவது அனுப்பும் முகவரி, அனுப்பிய முகவரி, ரெஜிஸ்டர் தபால், ஸ்பீடு போஸ்ட், மணியார்டர் எண், அலுவலகத்தில் இருந்து அனுப்புப்பட்டது மற்றும் அனுப்பப்பட்ட தேதியையும் குறிப்பிட வேண்டும்.

புகார்கள் சேமிப்பு கணக்கில் அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீட்டில் இருந்தால், அதன் கணக்கு எண் பி. எல். , ஆர். பி. எல். ஐ. , பாலிசி நெம்பர், முகவரி மற்றும் எந்த அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது ஆகிய விபரங்களை குறிப்பிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது"

தொடர்புடைய செய்தி