ராசிபுரம் எல்ஐசி மேம்பாலம் கீழ் ரயில்வே நிலையத்திற்குச் செல்லும் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் தினமும் ரயில் பயணிகள், பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணம் செய்கின்றனர். சாலையை உடனடியாக சீரமைத்து சீரான போக்குவரத்துக்கு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.