நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் இயேசு கிறிஸ்து நாற்பதாவது நாள் உபதேசித்ததை நினைவு கூறும் வகையில் கடைபிடிக்கப்படும் தவக்காலம் சாம்பல் புதன் அன்று தொடங்கியது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தேவாலயத்தில் சாம்பலை பூசிக்கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இதில் பங்கேற்று சிறப்பித்தனர்.