நேற்று மதியம் கொசவம்பட்டி மாநகராட்சி கிடங்கில் திடீரென காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.