நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் புலிகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நாகை திருவள்ளுவர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். அடுத்த ஆண்டு ஈரோட்டில் நடைபெறும் தமிழ் புலிகள் கட்சியின் மாநாட்டிற்கு பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றும், இந்த மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.